Log inskip to content

16 June 2013

இலங்கை அரசு 13ஆவது சட்டத் திருத்தத்தை மதிக்காமல் நடந்து வருகிறது-13ஐ காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் : டில்லியில் பெருமாள், சங்கரி வலியுறுத்தல்!

Courtesy: www.neruppu.com
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் புதுடில்லிக்கும் பயணமாகியுள்ளார்.

இந்நிலையில், இந்தியா-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்ற நிலையில் அதில் வரதராஜப் பெருமாளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாக ஆனந்தசங்கரியும் பங்கேற்றுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read the rest of this entry »

15 June 2013

ஆனந்தசங்கரிக்கு இன்று 80 வயது

Courtesy:www.thinakkural.lk

1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி புகழ் பூத்த கல்விமான் வீரசிங்கம் தம்பதியரின் புதல்வனாக யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்த ஆனந்தசங்கரி இளமைக் காலத்திலிருந்தே அரசியல் ஈடுபாடுடையவராக காணப்பட்டார். 1952 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல் பணிகளில் ஈடுபட்டாலும் 1959 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட தன் மூலமாக தனது அரசியல் பணியினை உத்தியோக பூர்வமாகத் தொடங்கினார்.
சமூக பேதமின்றி மானிடத்தை நேசிக்கும் ஆனந்தசங்கரி அன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டுமென்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்தார். 1960 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தொகுதியில் லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். புதியதோர் தொகுதியில் புதுமுகமாகக் களமிறங்கிய போதிலும் கணிசமான அளவு வாக்குகளை பெற்றிருந்தார். மீண்டும் இதே ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
இத் தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவினாலும் 720 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட கிளிநொச்சித் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் கால்நடையாகத் திரிந்து அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அப் பிரதேசத்தின் வளங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டார். இவரது கடின உழைப்பாலும் மக்கள் சேவையில் இவர் கொண்ட நாட்டத்தினாலும் மக்களால் ஒரு தீவிர அரசியல் தொண்டனாக மதிக்கப்பட்டார்.
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் இத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு கிளிநொச்சித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழுக்கு சமவுரிமை என்ற கோட்பாட்டினை லங்கா சமசமாஜக் கட்சி கைவிட்ட காரணத்தினால் இவர் அக் கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்.
1972 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் இலங்கைக்கென உருவாக்கப்பட்ட புதிய ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பை இவர் சார்ந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான அருளம்பலம், தியாகராஜா போன்றோர் ஏற்றுக் கொண்டு அச் சாசனத்தில் கையொப்பம் இட்ட வேளையில் அவ்வரசியல் அமைப்பினைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள் என உலகிற்கு எடுத்துக்காட்டி அவ் அவரசியல் அமைப்புக்கு எதிராக வாக்களித்தார். இதனால் அவருக்குக் கிடைக்க விருந்த பிரதி நிதியமைச்சர் பதவியையும் இழந்தார். தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட பொழுது அக் கட்சியில் இணைந்து இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினார். 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வட்டுக் கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை பற்றிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விமானத்தில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது கிளிநொச்சித் தொகுதியில் அதன் சார்பில் போட்டியிட்டு அப்போதைய தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் செல்லையா குமாரசூரியரை மிகப் பெரும்பான்மையான வாக்குகளால் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார்.
தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தீவிரமாக போராடிய பொழுதிலும் கிளிநொச்சித் தொகுதியின் அவல நிலையினைக் கண்டு அதனை வளர்ச்சிப் பாதையிலிட்டுச் செல்வதற்கு அந்தத் தொகுதி தனி மாவட்டம் ஆக்கப்பட வேண்டும் என்னும் கட்டாயத் தேவையினைப் புரிந்து கொண்ட தனிநாட்டு கோரிக்கை போராட்ட மத்தியிலும் தனி மாவட்டக் கோரிக்கையைத் துணிந்து முன்வைத்தார். இதனால் தாம் சார்ந்திருந்த கட்சியின் தலைமைப் பீடத்தினரின் நெருக்குதலுக்கு மத்தியிலும் தனி மாவட்ட கோரிக்கையினை வலியுறுத்தினார். அதற்காக தொகுதி வாழ் மக்கள் அனைவரினதும் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் பெற்று பல வெகுஜன போராட்டங்களை நடத்தினார். இக் கோரிக்கைக்கு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைப் பீடத்தின் ஒப்புதலையும் பெற்றார்.

இவரது கனவுத் திட்டமான கிளிநொச்சி மாவட்டம் என்னும் புதியதொரு நிர்வாக மாவட்டம் உருவாகியது. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் மாநாட்டு தீர்மான அடிப்படையில் தமது பதவிகளை வெறிதாக்கிக் கொண்டதைத் தொடர்ந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் அஞ்ஞாத வாழ்வை மேற்கொண்டிருந்த பொழுதிலும் துணிந்து பல உயிர் ஆபத்துகளின் மத்தியிலும் தமது அரசியல் பணியினை புறந்தள்ளி ஒதுக்காது அரசியல் பணிபுரிந்தவர் தான் ஆனந்தசங்கரி . யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் , வலிகாமம் பிரதேச சபைத் தேர்தல் ஆகியவற்றில் ÷ பாட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் ஆயுத போராட்ட காலத்திலும் கூட ஜனநாயகத்தின் மாண்பினை தமிழர் விடுதலைக் கூட்டணி வெளிப்படுத்தியிருந்தமைக்கு இவரே மூலகாரண கர்த்தாவாவார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில்தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஐவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கு துணிந்து செயற்பட்ட ஆனந்த சங்கரி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரும்பெரும் சேவைகளை ஆற்றினார்.
சகிப்புத் தன்மைக்கான யுனோஸ்கோ வின் மனெக்ஸா விருதானது இவரை தேடி வந்த பொழுதிலும் கர்வம் கொள்ளாது தமது அரசியல் பணியினை முன்னெடுத்து வருகிறார்.

ஜகன்பாபு
சுண்டுக் குழி
http://www.thinakkural.lk/article.php?article/iesilxtucm6656a16f3a5bda13329cfdes35f1de87328623f0a1711fqzn0a

15 June 2013

அகவை 80ஐ காணும் ஜனநாயகத்தின் ஒப்பற்ற குரல் - வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள்

courtesy: www.thenee.com
- வி.சிவலிங்கம்.

தமிழ் சினிமாவில் ஓர் வார்த்தை அது பலரின் வாயில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ‘ பன்றி கூட்டம் கூட்டமாக வரும், ஆனால் சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும்’ என்பதாகும். வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்களும் தனித்துப் போராடும் சிங்கமே. சிங்கிள் ஆகத்தான் பேசுகிறார். போராடுகிறார். தமிழ் அரசியல் வரலாற்றில் தனித்துவமான பங்கினைக் கொண்டுள்ள கட்சியின் தலைவராக உள்ள அவரது குரலை தனித்த குரலென கருதும் போக்கு ஒரு சாரார் மத்தியில் காணப்படுவது வருத்தத்திற்குரியது. துர்அதிர்ஸ்டமானது.

வரலாறு இவ்வாறான மனிதர்களை காலம் தாழ்த்தியே அடையாளம் காண்கிறது. இம் மனிதர்கள் உயிரோடு வாழும்போதே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களது அனுபவங்கள் காத்திரமான வரலாற்று அத்தியாயங்கள். தலைமை என்பது யாரோ சிலர் கைகளை உயர்த்துவதாலோ அல்லது வாக்குகளை பதிவு செய்வதாலோ கிடைத்து விடுவதில்லை. சிக்கலான தருணத்தில், தனது சுயநலன்களைப் புறம் தள்ளி தான் நேசிக்கும் மக்களுக்காக யார் குரல் எழுப்புகிறார்களோ, போராடுகிறார்களோ அவர்களே என்றும் தலைவர்களாக மதிக்கப்படுகிறார்கள். இவ்வாறான இம் மனிதப் பண்புகள் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டவை. கொடுமையான சமூக விளைவுகளுக்கு முகம் கொடுத்து அதனூடாக புடம் போட்டு வளர்ந்தவை. இவை சமூகத்தின் சில மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இன்னொரு முகமூடியாக அல்லது கவசமாக பயன்படுத்தி தான் வாழும் சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கும் ஆயுதமாக அதனைப் பயன்படுத்துவதில்லை. அவை ஓர் இலட்சியப் பயணமாக சிலரின் வாழ்வில் அமைந்து விடுகின்றன.

அகவை 80 இனை எட்டியுள்ள ஆனந்த சங்கரி அவர்களின் வாழ்வும் பல்வேறு போராட்டங்களினூடாக புடமிட்டு துலங்கும் ஒன்றுதான். எட்டு சகோதர, சகோதரிகளோடு பிறந்த ஆனந்த சங்கரி அவர்களின் குடும்பம் பெரியது என்ற போதிலும் ஒவ்வொருவருமே தமக்கே உரித்தான விதத்தில் தாம் வாழ்ந்த சமூகத்திற்கு சேவை புரிந்தனர். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபராக இருந்த இவரது தந்தை சாதி வெறிக்கு எதிராக தனித்துப் போராடியவர். மத வெறியர்களும், சாதி வெறியர்களும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் தேனீர்க் கடைகள் என பொது இடங்களில் சக மனிதர்களை மிகவும் கீழ்த் தரமாக நடத்திய அவ் வேளையில் பாடசாலை அனுமதியில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக முன்மாதிரியான அதிபராக செயற்பட்ட ஓர் சிங்கம் அவரது தந்தை வீரசிங்கம் அவர்களாகும்.

இக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் வன்முறைக்கும், அராஜகத்திற்கும் எதிராக குரல் கொடுத்தவர்கள். அதற்காக அதிக விலை கொடுத்தவர்கள். சாவகச்சேரி பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்த இராஜசங்கரி அவர்கள் இந்திய சமாதானப் படைகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதனால் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பகிரங்கமாக விமர்ச்சித்தார் என்பதற்காக அவரது இன்னொரு சகோதரர் ஞானசங்கரி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். தமது தந்தையின் படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பிய ஞானசங்கரி அவர்களின் புதல்வர்கள் இருவர் இரவோடிரவாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவரின் இன்னொரு சகோதரனான கணேச சங்கரியின் புதல்வரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த யோகசங்கரி தமிழ் நாட்டில் எம்மவர்களால் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு சகோதரனான பரதசங்கரியின் மகள் லண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்;. இவ்வாறாக இவர்களது குடும்பத்தை ஆயுத கலாச்சாரம் வெகுவாக பாதித்து உள்ளது.

துணிச்சல் மிக்க பாடசாலை அதிபர் ஒருவரின் புதல்வரான ஆனந்த சங்கரி அவர்கள் தனது 22வது வயதில் அகில இலங்கையில் வாழும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக செயற்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் அங்கத்தவரானார். தமிழ்ப் பிரதேசங்களிலே குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியவாதம் உச்ச நிலையில் இருந்த வேளையில் சர்வதேசியத்தை நேசிக்கும் சமசமாஜக் கட்சியில் அவர் இணைந்ததில் வியப்பு இல்லை. மனித சமூகத்தின் மத்தியிலே ஏற்றத் தாழ்வினை ஒழிக்க வேண்டுமெனவும், ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராட வேண்டுமெனவும் சமசமாஜக் கட்சி குரல் எழுப்பியது. மிக இளைஞரான அவர் கட்சியில் இணைந்த நான்கு ஆண்டுகளுக்குள் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தப்பட்டார். அந்த அளவுக்கு கட்சியின் தலைமைப் பீடம் அவர்மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தது. இத் தேர்தலில் அவர் அப்போதைய மேயரும், ஐ தே. கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வி. ஏ. சுகததாச அவர்களை எதிர்த்தே கொட்டாஞ்சேனை தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டார். கொழும்பு மேயரை அதுவும் ஒரு சிங்களவரை எதிர்த்து தமிழர் ஒருவரை நிறுத்தி பெரும் பரபரப்பை சமசமாஜக் கட்சி ஏற்படுத்தியிருந்தது. பலரின் கவனத்தையும் இத் தேர்தல் ஈர்த்தது. இத் தேர்தல் அவரை ஓர் நாடறிந்த இடதுசாரித் தலைவர் என்ற அளவுக்கு உயர்த்தியிருந்தது.

இதன் காரணமாகவே எந்தவிதமான முன் அறிமுகமும் அற்ற கிளிநொச்சித் தொகுதிக்கு 1960ம் ஆண்டு மார்ச் மாதம் இடம் பெற்ற தேர்தலில் கட்சி அவரை நிறுத்தியது. மிகப் பெரும் தொகையான விவசாய விளை நிலங்களையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் கொண்டிருந்த கிளிநொச்சிப் பிரதேசம் இன்று வரை அவரின் வாழ்விடமாக உள்ளது. 1960 இல் இடம் பெற்ற இரண்டு தேர்தல்களிலும் அதன் பின்னர் 1965 இல் இடம்பெற்ற தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய அவர,; ஒருa.sangaree-2போதும் அந்த மக்களைக் கைவிட்டுச் செல்ல எத்தனித்ததில்லை. அப் பகுதி மக்கள் கிளிநொச்சித் தொகுதியிலுள்ள கரைச்சி கிராமசபையின் தலைவராக அமர்த்தி அவரை தம்மோடு தொடர்ந்து இணைத்துக்; கொண்டனர். துடிப்பு மிக்க ஓர் சமூக சேவகனாக இருந்தமையால் அவர் பதவி வகுத்த கரைச்சி கிராமசபை குறுகிய காலத்தில் பட்டினசபையாக தரமுயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பட்டினசபையின் முதலாவது தலைவராக அவரையே அமர்த்தி அம் மக்கள் கௌரவித்தார்கள். கிளிநொச்சிப் பகுதி யாழ். மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால் பல விதங்களில் அப் பகுதி கவனிப்பாரற்ற நிலையிலேயே இருந்தது. அரச அலுவல்களை மேற்கொள்ள யாழ். அரச அதிபர் செயலகத்திற்கே செல்லவேண்டி ஏற்பட்டது. சாமான்ய உழைக்;கும் விவசாயிகள் யாழ்ப்பாணம் சென்று தரகர்களின் கைகளில் சிக்கி தமது அலுவல்களை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கிளிநொச்சி பட்டினசபையின் தலைவராக பொறுப்பெடுத்த நாள் முதல் கிளிநொச்சிப் பிரதேசத்தினை தனி மாவட்டமாக மாற்ற அவர் பெரும் முயற்சி எடுத்தார்.

தனது அரசியல் சகாக்களுடன் பல வாக்குவாதங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அவரது தன்னலமற்ற இடையறாத போராட்டம் இறுதியில் வெற்றியளித்தது. தரப்படுத்தலால் யாழ். மாவட்டம் பாதிக்கப்பட்டபோது எந்தவித தரம் வாய்ந்த பாடசாலைகள் இல்லாத கிளிநொச்சி மாவட்டம் தரப்படுத்தல் காரணமாக அம் மாவட்ட மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பை அளித்தது. தனி மனிதனாக இதனை அவர் சாதித்தார்.; அவர் ஓர் ஆசிரியனாக தமிழ்ப் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் கடமை புரிந்ததால் அவரின் சிந்தனை மிகவும் விசாலமாக மாற அவை உதவின. சிங்கள மக்களை, அவர்களின் மன உணர்வுகளை அவர் தினமும் அனுபவித்தவர். இதுவே அவரை இனவாத சிந்தனைக்கு அப்பால் எடுத்துச் சென்றன.

இடதுசாரியாக, ஆசிரியனாக, உள்ளுராட்சி நிர்வாகியாக, பாராளுமன்ற உறுப்பினனாக ஓர் உயர்ந்த பரிமாணம் பெற்றிருக்கும் அவர் இன்றும் அந்த மக்களோடுதான் தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அல்லது அதிகாரத்தை எட்டிப் பிடிப்பதுதான் அவரது அரசியல் இலக்காக இருந்திருப்பின் அடுத்தடுத்து தோல்வியைக் கண்ட பின்னர் எப்போதோ அரசியல் ஓய்வை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். சமசமாஜக் கட்சியிலிருந்து ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் விலகிய அவர், தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போதும் தனது தொகுதியை விட்டு அவர் விலகவே இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற போது அல்லது அங்கத்தவராக தேர்வு செய்யப்பட்டபின் தமிழ்த் தேசியத்தைத் தமது தோழ்களில் சுமப்பதாக பேசியவர்கள், ஐ நா. சபையிலே கொடியேற்றுவதாக பீத்தியவர்கள் பதவி பறிபோனதும் ஓய்வுக்கு சென்ற வரலாறுகள் நிறையவே உண்டு.

மனிதர்கள் தமது இலட்சியங்களை தமது கனவாக மாற்றி அக் கனவுகளை நனவாக்க தினமும் உழைக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதே தமது இலட்சியப் பயணமாக கைக் கொள்கின்றனர். இவ்வாறு தன்னலமற்ற வகையில் தனது சமூகத்திற்காக செயற்படும்போது கிடைக்கும் பதவிகளை அந்தa.sangaree-3 மக்களின் நலன்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற எஜமானர்களுக்கு சேவகம் செய்பவர்களாக தம்மை வரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அதனை தமது அதிகார இருப்பிற்காக அல்லது சுயநலன்களை வளர்க்க உபயோகிப்பதில்லை. இதுவே ஆனந்த சங்கரி அவர்களின் வாழ்வின் அத்தியாயங்களிலும் காணப்படும் பிரதான அம்சமாகும். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது தொகுதிக்கே செல்லாத உறுப்பினர்கள் பலர் உள்ள இவ் வேளையில,; பதவி இல்லாத சூழலிலும் தான் நேசித்த மக்களோடு உண்டு, உறங்கி அவர்களின் சுக துக்கங்களுடன் பகிர்ந்து வாழும் பண்பு மிக்க ஓர் மனிதராக அவரைக் காண்கிறோம்.

ஓட்டு மொத்தமான குடும்பமும் வன்முறையை, சமூக ஒடுக்கு முறையை எதிர்த்தே வாழ்ந்தது. தமது உயிரை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கவும் அவர்கள் பின்னின்றதில்லை. இத்தகைய வாழ்வுப் பின்ணியிலிருந்தே அவரது ஒவ்வொரு நகர்வுகளையும், முடிவுகளையும், அணுகு முறைகளையும், விமர்சனங்களையும்; பார்க்க வேண்டியுள்ளது. 2004ம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் எழுந்த பிரச்சனைகள், அதன் தாக்கங்கள் என்பனவும் இப் பின்னணியிலிருந்தே அணுகப்பட வேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஓர் வரலாற்றுத் தேவையிலிருந்தே தோன்றியது. 1970 இல் இடம்பெற்ற தேர்தலில் முக்கியமான அரசியல் தலைவர்களான ஜி ஜி, சிவசிதம்பரம், அமிர் ஆகியோர் தோற்கடிக்கப்பட்ட நிலையில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. தமிழ்க் கட்சிகள் தத்தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்வதால் மக்களின் ஐக்கியம் பலவீனப்படுத்தப்படுவதோடு அரசியல் பலமும் வீணடிக்கப்படுவதாக உணர்ந்த தந்தை செல்வா அவர்கள் ஜி ஜி அவர்களிடம் சென்று ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா அவர்களே கட்சியை விட மக்களின் ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்ததால் தமிழரசுக் கட்சியைக் கைவிட்டு கூட்டணி அமைக்க தயாரானார். தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய காரணத்தால்தான் தமது கட்சிகளைக் கைவிட அதன் தலைவர்கள் முற்பட்டார்கள். தமிழ் மக்களிடையே என்றுமில்லாத அளவுக்கு உற்சாகம் காணப்பட்டது. புதிய வேகம் எழுந்தது. தமிழரசுக் கட்சியின் வரலாறு அத்துடன் நின்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதிய அமைப்பின் வரலாறு தொடங்கியது. அதே போன்று தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வரலாறும் முடிந்த வரலாறாகியது. இக் கட்சிகளால் இனிமேல் மக்களுக்கு தலைமை தாங்க முடியாது என்ற முடிவின் காரணமாக கட்சியை கைவிட்ட அதன் தலைவர்கள், தாம் இருக்கும் வரை தமது பழைய கட்சிகள் குறித்து பேசவோ அல்லது கடந்த காலம் குறித்து சர்ச்சைப்படவோ இல்லை. மிகவும் பெரும்தன்மையோடும், தன்னடக்கத்தேர்டும் செயற்பட்டார்கள். ஒருவரை ஒருவர் மதித்து செயற்பட்டார்கள். இன்றுவரை மூடிவைக்கப்பட்ட தமிழ்க் காங்கிரஸின் வரலாற்றினைப் பற்றி ஆனந்த சங்கரி அவர்கள் பேசியதில்லை. தமிழர் கூட்டணியே தன் எதிர்கால வரலாறு, அதன் தலைவர்களே தனது மேன்மைக்குரிய தலைவர்கள் என எண்ணி, மறைந்த அத் தலைவர்களை நினைவூட்டும் வகையில் அவர்கள் நிழல்களிலேயே அவரது பயணம் செல்கிறது.

இத் தலைவர்கள் உயிரோடு இருந்தபோது தம்மை வாரிசாக கருதியவர்கள், இரத்த திலகம் இட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று அவர் பெயரைக்கூட உச்சரிப்பது இழிவானது என்ற அளவுக்கு அதிகாரபோதையில் உள்ளார்கள். தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட உன்னதமான அம் மா மனிதர்கள் குறித்து அவரவர்களின் குடும்பங்களே தமது செலவில் நினைவு தினங்களை கொண்டாடும் பரிதாப நிலையில் உள்ளன. மக்கள் ஏன் இத் தலைவர்களை மதிக்கத் தவறுகிறார்கள்? இவர்களின் வரலாறுகளை திட்டமிட்டு ஒழிக்க அக் கட்சிகளின் இன்றைய தலைவர்களே காரணமாக உள்ளார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்படும் பிரசுரங்களில் பல தலைவர்களின் பெயர்கள் திட்டமிட்டே தவிர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசு தமிழர்களின் வரலாற்றினை இருட்டடிப்பதாக கூக்குரல் போட்டு தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதாக மாய்மாலம் கொட்டுகிறார்கள். தமது கட்சித் தலைவர்களின் வரலாறு மறைக்கப்படுவது குறித்து மௌனம் கொள்கிறார்கள். இதற்கு யார் காரணம்? சரியான அரசியல் கலாச்சாரத்தை தனது அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் தகைமையை இன்றைய தலைவர்கள் இழந்து விட்டனர். பதவி, அதிகாரம், சுயநலம் என்பன அரசியலிற்குள் குடி புகுந்துள்ளன. மக்களைப் பற்றிய கவலைகள் இரண்டாம் பட்சமே. கல்வி அறிவிலும், அறிவாற்றலிலும, மக்களை நேசிப்பதிலும் திறமை படைத்த இத் தலைவர்கள் தமக்கென சொத்துக்களைக் குவிக்க எண்ணியதில்லை. குவித்ததுமில்லை. அதன் விளைவுகளின் கொடுமைகளை அக் குடும்பங்கள் இன்னமும் அனுபவிக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை சுமப்பதாக கூறும் இன்றைய தலைவர்கள் பல தலைமுறைகளுக்கு சொத்துக்களை குவித்துள்ளார்களே, இது எப்படி சாத்தியமாகியது? ‘மக்கள் பஞ்சத்தில் மந்திரிகள் மஞ்சத்தில்’ என்ற நிலையல்லவா இது? இதன் காரணமாகவே ஆனந்த சங்கரி அவர்களின் சமீபகால கருத்துக்கள் காட்டமாக காணப்படுகின்றன.

மக்களை நேசித்து தமது சுகபோகங்களைத் துறந்த தலைவர்களின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் அக் கட்சிகளின் இன்றைய தலைவர்கள், இந்த வரலாறுகளுடன் சம்பந்தப்படாது தூரத்தே நின்று அன்று செயற்பட்டவர்கள். அதாவது தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் என்ற கோஷ்டி அரசியல்கள் மத்தியிலே தமது அரசியலை வளர்த்துக் கொண்டவர்கள். இன்னமும் அந்த கோஷ்டி மனப்பான்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே இன்னமும் ஆனந்த சங்கரி அவர்களை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்காரனாக பார்க்கும் மனநிலை காணப்படுகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றின் வரலாற்றினை அதனைப் பிரசவித்தவர்களாலேயே கைவிடப்பட்ட நிலையில், அக் கட்சிக்கு மீண்டும் உயிருட்ட எத்தனிப்பவர்கள் அதே மனநிலையில் இன்னமும் விவாதங்களை நகர்த்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் ஆனந்த சங்கரி அவர்கள் அதிலிருந்து வெகு தூரத்தில் உள்ளார். அவர் கூட்டமைப்பினைக் காப்பாற்றி அதனை அரசியல் சக்தியாக தொடர்ந்தும் வளர்க்க பலரையும் அழைத்த போதும்;, அதில் ஆர்வம் காட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்கள் தயாராக இல்லை. கட்சிகளை யாரும் தோற்றுவிக்கலாம். கொண்டாடலாம். ஆனால் அவை மக்களின் முன்னேற்றத்திற்கு குந்தகமாக அமையக் கூடாது.

2004ம் ஆண்டு தமிழர் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவுகள் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளவில்லை. தமிழரசுக் கட்சி எப்போதும் சாத்வீகத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியினர் தமிழர் கூட்டணியாக செயற்பட்ட காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? தம்மைச் சாத்வீக வாதிகளாக அடையாளப்படுத்தினார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் போக்கு குறித்து அதுவும் சொந்த மக்கள் மேல் கொடுமைகள் குவிக்கப்பட்டபோது எவ்வாறு மௌனமாக இருக்க முடிந்தது? குறிப்பாக 2004 ம் ஆண்டு தேர்தலின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் பல அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்த நிலமையில், அவர்களின் பிரதிநிதிகளை அத் தேர்தலில் அபேட்சகர்களாக நியமிக்க இவர்கள் சம்மதித்தார்கள். விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவும், அவர்களுடன் பேசி முடிவுக்கு வரவேண்டும் எனவும் அரசை வற்புறுத்தினார்கள். இதில் காணப்பட்ட முக்கிய அம்சம் என்னவெனில் சாத்வீக அரசியலை வற்புறுத்தும் கூட்டமைப்பைச் சார்ந்த இவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட ஆதரித்ததன் மூலம் இக் கட்சியின் வரலாற்றினை பயங்கரவாதத்தின் பக்கம் திருப்ப எத்தனித்தார்கள். இதுவே ஆனந்த சங்கரி அவர்களின் பொறுமைக்கான திருப்பு முனைக்கான காரணமாக அமைந்தது எனலாம். வன்முறையாளர்கள் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த அவர் தடையாக இருந்தமையால் அத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தினார்கள். தேர்தல் தேவைக்காக அதன் சின்னத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் தற்போது கட்சிக்கு உயிருட்ட எத்தனிப்பது ஓர் அரசியல் துரோகத்தனமாகவே உள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு உயிருட்ட குமார் பொன்னம்பலம் அவர்கள் எத்தனித்த போது அதற்கு ஆதரவு அளிக்க சிவசிதம்பரம் அவர்களும், ஆனந்த சங்கரி அவர்களும் மறுத்திருந்தனர். ஐக்கியத்தின்பால் அவர்கள்; கொண்டிருந்த அசையாத நம்பிக்கைக்கு இது நல்ல உதாரணமாகும்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எதிர்த்த அவர் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்தே சென்றார். ஓர் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவை குறித்து மிகவும் தீர்க்கமாகவே உணர்ந்திருந்தார். அதனால் அவர் அதற்கான இடைவெளியை சரியாக கணித்த காரணத்தால் தேர்தலில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை, வன்முறைக்கு ஆதரவானவர்களை இணைப்பதை கடுமையாக எதிர்த்தார். ஓர் ஜனநாயக கட்சியின் பொறுப்புள்ள தலைவர் என்ற வகையில் அதன் கொள்கைகளை பயங்கரவாதத்திற்கு விலைபேச அவர் தயாராக இருக்கவில்லை. இதனால் அவர் எதிர்நோக்கிய அபாயங்கள் பல. கட்சிக்குள் செயற்பட்ட பலரே சந்தேகத்திற்குரியவர்களாக மாறத் தொடங்கினார்கள். இப்; புறச் சூழல்கள் அவரை கொழும்பில் பாதுகாப்பு அரண்களுக்குள் வாழ நிர்ப்பந்தித்தது. அரசின் பாதுகாப்பை நாட வைத்தது. அவரது நீண்ட கால நண்பர்கள் நேரில் சென்று சந்திக்க தயங்கினார்கள். உறவினை வைத்திருப்பதாக கூறுவதற்கும் பயந்தார்கள். தொலைபேசி உரையாடல்களைத் தவிர்த்தார்கள். நீண்ட காலமாக கட்சியின் சகாக்களாக செயற்பட்டவர்கள் அவரை தமது பகையாளியாக பகிரங்கமாக காட்டி தமது உயிர்களைக் காத்துக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் வாழ்ந்தார்கள்.

தமிழரசுக் கட்சியை கைவிட்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைத் தோற்றுவித்த தலைவர்கள் மறைந்துவிட, கட்சி அரசியல் பலவீனமாகி ஆயுத இயக்கங்கள் படிப்படியாக ஜனநாயக நீரோட்டத்தில் பலமடைந்து வர அதனைச் சாதகமாக்கி தமிழர் கூட்டணி (தமிழரசுக் கட்சி) மீண்டும் இந்த அமைப்புகளுடன் இணைந்து கூட்டமைப்பினை அமைத்துக்கொண்டது. தமிழரசுக் கட்சி தனித்துச் செயற்பட முடியாத நிலையில் தனது கட்சி சின்னத்தை சகலரும் பயன்படுத்துவதால் அதனைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சியி;ன் பலத்தை அதிகரிக்க மீண்டும் ஓர் முயற்சி காணப்படுகிறது.

அகவை 80 இனை எட்டியுள்ள ஆனந்தசங்கரி அவர்களின் சமீபகால கருத்துக்களை போருக்குப் பின்னதான தமிழ் அரசியலின் போக்கினை முன்னிறுத்தி அவதானிப்பதே பொருத்தமானது. தமிழர் கூட்டமைப்பிற்குள் இணைந்துள்ள அவர், கட்சியின் போக்குகள் குறித்து பகிரங்கமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. அவர் இதுவரை வெளியிட்டு வரும் கருத்துக்கள் கூட்டமைப்பின் வெளிப்படைத் தன்மை குறித்த அம்சங்களே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள அந்தக் கட்சி மிக முக்கியமான தீர்மானங்களை அதுவும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை பூட்டிய கதவிற்குள் எடுத்த பின் அதனை மற்றவர்கள் மேல் திணிக்க முடியாது. இதுவே கடந்த காலங்களிலும் செயற்பாடாக இருந்தது. அதுவே இன்றைய பின்னடைவிற்குக் காரணமாகவும் அமைந்தது. இதன் தாற்பரியத்தை நன்கு உணர்ந்த காரணத்தால் அதனை அவர் மக்கள் முன்னிலையில் வைக்கும்போது அவர் குழப்பவாதியாக கருதப்படுகிறார். தமிழர் கூட்டமைப்பிற்குள் தற்போது சித்தார்த்தர் அவர்களின் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஆனந்த சங்கரி அவர்களின் தலைமையிலான தமிழர் கூட்டணி என்பன இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்மநாபா பிரிவான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியில் தனித்து விடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதற்கான அரசியல் காரணங்கள் என்ன? கட்சிகளின் ஜனநாயகம் எங்கே? சுரேஷ் அவர்கள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறானால் கூட்டமைப்பு என்பது எப்போது தனி நபர் சொத்தாக மாறியது? ஓர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அக் கட்சியை இணைக்க தடைகள் என்ன? தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக சகலரும் இணைய வேண்டும் என ஒரு புறத்தில் குரல் கொடுத்துக்கொண்டு மறுபுறத்தில் கதவுகளை அடைப்பது ஏன்? இவ்வாறான பல பிரச்சனைகளை அவர் எழுப்பும்போது வழமையான மகுடி வாசிக்கப்படுகிறது.

மக்களை நேசித்து அந்த மக்களோடு தன்னை இணைத்து வாழும் ஆனந்த சங்கரி அவர்களை சகலரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். நாட்டின் அரச நிர்வாகத்தின் செயற்பாடுகளை அதன் ஆரம்பத்திலிருந்தே அதாவது உள்ளுராட்சி அரசியலிலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற உறுப்பினர் வரை படிப்படியாக உயர்ந்து சென்றவர் அவர். நாட்டின் வரலாற்றோடு இணைந்த பல அரசியல் தலைவர்களின் நேரடி அனுபவங்களின் தொகுப்பாக அவர் காணப்படுகிறார். மிகவும் அனுபவமும், ஆற்றலும் மிக்க அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எமது அவா. முதிர்ச்சி, ஞாபக மறதி என்பன அவரது சிந்தனையோடு போட்டியிடுகிறது. அவரது போராட்டம் அதற்கும் எதிராகவே உள்ளது. தினமும் நூற்றுக் கணக்கான மைல் உள்ளுரில் பயணம். தயங்காமல், உடல்நிலையை கவனிக்காமல் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் என்பனவற்றைப் பார்க்கும்போது அவர் என்றுமே மதிப்புமிக்க, உறுதியுள்ள போராளியே. சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறோம்.

http://www.thenee.com/html/v_ananthasangary.html

4 March 2013

பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி

courtesy:www.asrilanka.com

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://asrilanka.com/2013/03/04/15455

1 February 2013

காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு உதயம்!

அரசியல் பின்னணிகள் இன்றி சுயாதீனமாக இயங்க முடிவு:-கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. இந்த அமைப்பின் அங்குராபர்ணக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று (01.02.13) இலங்கைநேரம் 10.30ற்கு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88183/language/ta-IN/article.aspx

இந்த வேளையில் கூட்டம் நடைபெற இருந்த பகுதியை அடைந்த படையினர் மிரட்டும்பாணியில் அங்கு ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்ட பலரது ஆள் அடையாள அட்டை விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கலந்து கொண்ட 200 வரையிலான காணாமல் போனோரின் உறவினர்களில் சிலர் சற்று பயந்து கலங்கிய போதும் பெரும்பாளானவர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் எதற்கும் தயார் என தம்முள் பேசிக்கொண்டனர்.

இதேவேளை தெற்கின் மனித உரிமை ஆர்வலரின் பேருதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு எந்த அரசியல் பின்னணிகளும் இன்றி சுயமாக இயங்கும் என இதன் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லோருடமும் அலைந்து தாம் விட்ட கண்ணீருக்கு உரிய தீர்வுகள் கிடைக்காத நிலையில் தெற்கின் மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர் தமது துயர்துடைக்க உதவிகளை புரிந்திருக்கிறார் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் கூட்டத்தை நடத்த இடம் கொடுப்பதற்கு எல்லோருமே அஞ்சிய நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தனது அலுவலகத்தை நிபந்தனையின்றி வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ இலங்கையின் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என கூறியது குறித்து கடுமையான விசனங்களைக் கொண்டுள்ள சரணடைந்த மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சொந்தங்களை தேடிக் கண்டு பிடிக்கப் போராடப் போவதாக உறுதி எடுத்துள்ளனர்.

4 பிள்ளைகள் காணாமல் போன நிலையில் தனியே வாடும் ஒருதாய், 3 பிள்ளைகளைகள் காணாமல் போய் தனியே தேடி அலையும் தாய் என சுமக்க முடியாத சோகங்களை சுமந்த பலர் அங்கே கண்ணீரை விட்டு தமது துயர்களைக் கூறியபடி இருந்தனர்.

முல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட உறவினர்களை தேடி அலையும் 200 வரையிலானவர்களில் அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத் தெரிவிலே தாமாக முன்வந்து தமது பெயர்களை கொடுத்த கானாமல் போனோரின் உறவினர்களில் ஒரு தாய் கூறினார் எல்லோரும் சேர்ந்து தேடுவோம் எனது பிள்ளை கிடைக்காவிடினும் மற்றயவர்களின் பிள்ளைகள் கிடைத்தாலும் அவர்களும் எங்கள் பிள்ளைகள் தானே எனக் கூறியது பலரையும் துயரங்களுக்கு உள்ளாக்கியது.

இன்றய (01.02.13) ஒன்று கூடலில் கலந்து கொண்டவர்களில் 22 பேர் தமது கண்முன்னே படையினரிடம் சரணடைந்த தமது உறவினர்களின் விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.

இன்று (01.02.13) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பிரதி மாதம்தோறும் ஒன்று கூடுவதாகவும் சரணடைந்து மற்றும் காணாமல் போனோரை தேடுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும், சர்வதேசத்திற்கு தமது பிரச்சனைகளை கொண்டு செல்ல உள்ளதாகவும் உறுதியெடுத்துள்ளது.

வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்பட உள்ள இந்த அமைப்பிடம் காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தபின் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒப்படைக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24 January 2013

இருண்ட ஒரு எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகின்றோமா? - வீ.ஆனந்தசங்கரி

“நீதி நிலைப்பதாக தோன்றவேண்டுமானால் இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்; விடுதலை செய்ய வேண்டும். எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின்; மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா?” - வீ.ஆனந்தசங்கரி

மேலும் 1400 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைது செய்யபட உள்ளார்கள் என்ற
இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை தாம் கைது செய்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும், முகாம்களிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை தரமுடியுமா? முடியாத பட்சத்தில் இக்கூற்று கேலிக்குரியதாகும். ஒரு மணித்தியால பயிற்சியை விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்றிருந்தால்கூட அந்த இளைஞர்களும், யுவதிகளும் சரணடைய வேண்டுமென்றும் சிறு விசாரணையின் பினனர்; அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு சரணடைந்த அனைவரும் விடுதலைப்புலி போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று நான் அடிக்கடி கூறி வந்திருக்கின்றேன். அத்தகையவர்களில் அநேகர் மிக சொற்ப பயிற்சி அல்லது எதுவித பயிற்சியும் எடுக்காது பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாகும். அவர்களில் அநேகர் மேற்படிப்பை தொடர தகுதியுடையவர்கள் மட்டுமல்ல கல்வியை தொடர்ந்திருந்தால் வைத்தியர்களாகவோ, சட்டத்தரணிகளாகவோ, பொறியியலாளர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவோ உருவாகியிருப்பார்கள். இவர்களில் அநேகர் பலாத்காரமாகவும் அச்சுறுத்தப்பட்டும் கட்டாய பயிற்சிக்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள். அவர்களின் உயர்கல்வி கற்கும் பொன்னான வாய்ப்பை நாசமாக்கி விடுதலைப் புலிகள் என நாமம் சூட்டியதுமல்லாமல் இன்னும் 1400 பேர் கைது செயப்படவுள்ளார்கள் என இராணுவத்தின் உண்மைக்கு மாறான நிலைப்பாடு மிகப்பெரிய பாராதூரமான குற்றச்சாட்டாகும். Read the rest of this entry »

24 January 2013

சிறுபான்மையினரை பயப்பீதியில் ஆழ்த்தவே இலங்கை அரசு புலிப் பூச்சாண்டி காட்டுகிறதுகைது நடவடிக்கையை கைவிடவேண்டும் என்கிறார் சங்கரி

Courtesy: onlineuthayan.com
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்து இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் என 1400 பேர் உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.

அத்துடன் ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா என்று மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புகின்றேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பதென பிறநாடுகளுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி மூன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இந்த நாட்டில் எப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என நான் உறுதியாக நம்புகின்றேன்.

அப்படி ஒருசிலர் தப்பித்தவறி இருப்பின் அவர்களை கணக்கிலெடுக்கத் தேவையில்லை. ஏனெனில் கடந்த மூன்றரை ஆண்டுக்குள் ஒரு துப்பாக்கிச்சூட்டு சத்தம்கூடக் கேட்கவில்லை. அப்படியொரு உயிரிழப்பும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுமேயானால் எதுவித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் தலைமறைவாக வாழ முற்படுவர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனின் அலுவலக பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த ஆபத்தான நடவடிக்கைக்கு முன்னோடியாகும்.

இவற்றை அடிப்படையாக வைத்து வடக்குக் கிழக்கில் படை பலத்தை பேணுவதற்கு அரசு முயற்சிக்கிறது. இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பது, பலப்படுத்துவது, போர் தளபாடங்களை கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் பேண அரசு விரும்புகிறது.

அதுமட்டுமல்ல சிறுபான்மை மக்களை நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கு முயற்சிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும். என்றுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=209951788124333055

22 January 2013

தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமன்:வீ.ஆனந்தசங்கரி!

Courtesy: neruppu.com
தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமனாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”காலத்தின் தேவைக்கமைய தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாக செயற்படும் நோக்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த கட்சிகள் அனைத்தும் சம பலத்துடனேயே இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமையால் வேறு வழியின்றி தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டனவே அன்றி அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிக்கு தனித்துவம் இருக்கவில்லை.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி தமிழரசுக் கட்சிக்கல்ல. இந்த அடிப்படையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுமாறு மக்கள்; அழுத்தம் கொடுத்தனர்.

சந்தர்ப்ப சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது சுயநோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கூட்டுக் கட்சிகளின் வேட்பாளர்களை தமிழரசு கட்சியில் இணைத்தமையை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கை அமைகிறது.

இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் அதன் அங்கங்களேயாகும்.

சில சுயநலவாதிகள் குட்டையை குழப்பி பருந்துக்கு இரையாக்காது தடுக்க சம்பந்தன் செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகியன முன்வந்ததேயொழிய தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்காக அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற ஓர் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற சம்பந்தனின் கோரிக்கைக்கு மக்கள் சார்பில் வரும் பதிலே இதுவாகும். 2004ஆம் ஆண்டுக்குப் பின் நடந்தேறிய அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்” என்றார்.

http://www.neruppu.com/?p=69265#more-69265

9 January 2013

தமிழரசுக்கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து பங்கேற்க முடியாது! பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை

Courtesy: Thenee.com
தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையகத்தில் 29-12-2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை

அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்மக்களின் இன்றைய நிலை முன்பு என்றும் இல்லாதவாறு மிக மோசமாகி இருப்பதோடு நிலைமை நாளுக்குநாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும், சுயநல நோக்கமும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த பொதுச்சபை கூட்டத்தில் உங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதே. எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை. தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைமையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ந்து தேவைக்கேற்றவாறு ஆதரவு வழங்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக்கட்சி தலைவர்களை பல்லக்கில் வைத்து பல்லக்கை சுமப்பவர்களாகத்தான் இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியவற்றின் தலைமை செயற்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் மிகப் பொருத்தமாக இருப்பதால் 01-12-2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களுக்கு நான் அனுப்பியிருந்த கடிதத்தை முழுமையாக தர விரும்புகின்றேன்.

அன்புள்ள சாம்,

உங்களுக்குப் பிடிக்காது போனாலும் மிகப் பொறுப்புணர்வோடு இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும். இந்நாட்டு தமிழ்மக்கள் குறிப்பாக வடகிழக்கில் வாழ்பவர்கள் எதிர்நோக்கும் இருண்ட எதிர்காலம், நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலைமை, பிரச்சனைகள் விரிவாக அதிகரித்துவரும் இவ்வேளையில் ரோமாபுரி தீப்பற்றி எரியும் போது ரோம் சாம்ராச்சியத்தின் மன்னன் நீரோ வீணை வாசித்துக் கொண்டிருந்தது போல் நானும் நீங்களும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையை உணர்ந்து, செய்வது என்னவென்று அறியாது தவிக்கும் தமிழ்மக்களின் குரலுக்கு செவிமடுத்து விழிப்படையும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஏனைய தமிழ் தலைவர்களோடு ஒப்பிடும் போது நானும் நீங்களும் அரசியலில் மிக முதிர்ந்தவர்கள் என்பதால் தமிழ் மக்களுக்கு முறையான தலைமையை வழங்க வேண்டிய கடமை எங்களுக்குண்டு. இதற்காக நான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றேன். Read the rest of this entry »

31 December 2012

Government stating tigers resuming is fabricated Ananthashankari emphasize

Government stating that Tamil Eelam Liberation tiger’s movement has resumed is totally fabrication. By originating such erroneous opinion, government should curtail in shoving the Tamils to a dark era.

There is no necessity to provide psychosomatic resource consultation to the university students. They themselves will attend to their selves.

To retain the army’s presence, those connected with the students should guide them to abstain from getting involved in the activities which gives opportunity to the government was mentioned by Tamil Liberation Alliance Leader V.Ananthashankari at the Tamil Liberation Alliance annual general council meeting. Read the rest of this entry »

About

author
Anandasangaree

Read more...



Monthly Archives

Links